அதிகாலை வணக்கமே ஊஞ்சலில் தான் என்றிருக்க கலைத்து ஓய வந்துவிடும் எம்மூத்தவளின் தேனீர் குவளை அந்தி சாயும் வரையில் பூங்காவின் மணலில் கை மறைத்து அசைய கோவில் கட்டி கும்பிடுவோம் வீட்டுப்பாடம் படித்திட நாங்கள் கதைகள் நூறு பேசிக் கிடப்போம் லெட்டர் எழுதி பதிலது கொடுக்க அஞ்சல் அலையாய் 90s கிளிகள் பொதிகை மட்டும் கருந்திரையாய் நேரம் பார்த்து அணைந்திருக்கும் பாடல் பாட ஆட்டமும் வனப்பாய் ஒவ்வொரு வரியும் மனப்பாடமே பாவாடை கட்டிய இளையவள் போலே அவளோடு நானும் ஆடியதுண்டு அப்பா அம்மா இல்லாத சமயம் காம்ப்ளான் திருடியதாய் அடியுமுண்டு Ii