என்னவள் என்னை எழுதி இருந்தால்..! இவன் என்னை தான் காதல் செய்கிறானா..? நான் நிதம் ஏங்கும் விழிகள் காதல் மொழி பேசுமா..? பயமிவன் அடையாளம் தான் அதற்கென்று அளவில்லையா.. ரசனை யுள்ளவன் அழகாய் தமிழ் கிறுக்கும் கிறுக்கன் அப்பாவி என்னை காதல் செய்த பெரும்பாவி..! பலமுறை புலம்பலும் சிலமுறை காதலும் கலந்து தந்திடுவான் எனையும் குழப்பிடுவான் காதல் மட்டும் சொல்லமாட்டான்..! ஆனால் அதற்கான காரணம் தந்திடுவான்..! இவன் மர்மமாக எனை கவர்ந்த மாயக் கண்ணன்..! நல்லதொரு காதலன் எனக்கு முன்னவளிடம் தொலைத்த வாழ்வை என்னிடம் பெறுவானா..? நானும் தருவேனா..? நான் பெண்ணென்பதை மறந்தேன் உன்னால் அழகின்மேல் கர்வம் கொள்கிறேன் உன் கண்களை அவை கவர்வதால் என் மச்சமேல் கோவம்கொள்வேன் எனை தாண்டி அதை ரசிப்பதனால்.! ஏனடா..! கொல்கிறாய் எப்போது சொல்வாய் கேட்க ஓர் வருடம் தாளவேண்டுமா..! என் ரசனைகள் எனை தாண்டி நீ ரசிப்பதனால் என் ரசனைகளிலும் உனையே ரசிக்கிறேன்..! ஒ.. என் ரசிகா என் காதலா..! 90's kids single la.. ipudi.. tha.. namaku nammale.. ezhuthikanum...! apudi ezhuthkittatha undu..! #காதலியம் ஒ பெண்களே..! சரியாக பெண்மை எழுத.. பட்டதா.. தெரியவில்லை.. சரியென்றால் பாராட்டுங்கள்.. தவறென்றால் சுட்டியும் காட்டுங்கள்..! முடிந்தால் நீங்களும் பாலினம் மாற்றி எழுதுங்கள் எனக்கு பிடித்திருந்தது..! #teakadaikavithaigal #yqkanmani #yqbaba