Nojoto: Largest Storytelling Platform

part 4 அந்த அமைதியான இடத்தில திடீரென்று சப்தம் வந

part  4
அந்த அமைதியான இடத்தில திடீரென்று சப்தம் வந்தால் யார் தான் பயப்படாமல் இருப்பார்கள் நான் மீண்டும் அந்த நாற்காலி அருகே சென்றேன் அங்கு யாரோ ஒருவர் படுத்து இருக்கும் மாதிரி தான் எனக்கு தோன்றியது.

என் நெஞ்சம் படபட வென்று அடிக்க நான் மெல்ல ஒவ்வொரு அடியை எடுத்து வைத்தேன் சுவரில் எல்லாம் ரத்தம் சிந்திக் கிடந்தது நான் அந்த நாற்காலி அருகில் சென்று அந்த போர்த்தி இருந்த துணியை விளக்கினேன்.

அங்கே ஒரு கூடை இருந்தது அதனுள் ஒரு ஆடுகுட்டியின் தலையும் கடித்து குதறிய நிலையில் அதனுடைய உடலும் இருந்தது.

சத்தமாக அலறி விட்டேன். அந்த கூடையை ஒரு பக்கம் தூக்கி வீச அந்த கூடையில் இருந்து ரத்தம் சிந்தி ஆட்டின் தலை ஒரு மூலையில் சென்று விழுந்தது

அது வரையில் தைரியமாக இருந்த நான் இப்பொழுது கதிகலங்கி யானை இடம் இருந்து என் உயிரை காப்பற்றிக் கொள்ள நினைத்து இப்படி ஒரு அமானுஸ்ய வீட்டிற்குள் நுழைந்து விட்டேனே என்று ஒரு நொடி நான் என்னையே திட்டிக் கொண்டேன்.

சரி இனியும் ஒரு நொடி கூட தாமதிக்க கூடாது அப்படியே வெளியே சென்று விடலாம் என்று பின்னால் திரும்ப அங்கு பெரிய கோர முகத்தோடு ஒருவன் நின்று இருந்தான்.

©Ramya V
  part 4 horror story tamil
ramyav9141280552516

Ramya V

New Creator

part 4 horror story tamil #திகில்

89 Views