காய்ந்து உதிரும் மலர்களாய் என் கனவுகள் சிதைந்தது..! காலையும் புலர்ந்தது கடை விழியால் பார்க்கிறேன்..! கலர் கலராய் புது மலர்களும் கண் சிமிட்டிச் சிவந்தது..! புது கனவுகள் பிறந்தது புத்துணர்வுடன் புன்னகைக்கிறேன்..! நேற்று உதிர்ந்த மலர்கள் எனை பார்த்து வியக்க..! உதிர்ந்தாலும் புது மலர்களை உதயமாக்கும் நம்பிக்கை உனக்கிருக்க..! கலைந்தாலும் புது கனவுகள் நிஜமாக்கும் நம்பிக்கை எனக்கிருக்கிறது என்ற தைரியத்தில்..! புது விடியல் கண்டு புன்னகைக்கிறேன்..! -IF.MUNEEFA- 🖤🤍❤ மௌன மொழிகள் #paidstorymotivational